அமுக்தாபரண ஸப்தமி

அமுக்தாபரண ஸப்தமி 05-09-19 வியாழக்கிழமை

भद्रे भाद्रपदे शुक्ले सप्तम्यां सलिलाशये।
स्नात्वा तु मण्डलं कृत्वा विलिखेत्  पार्वतींशिवम् ॥

பத்ரே பாத்ரபதே ஶுக்லே ஸப்தம்யாம் ஸலிலாஶயே।
ஸ்நாத்வா து மண்டலம் க்ருத்வா விலிகேத் பார்வதீம்ஶிவம் ॥

பாத்ரபத (ஆவணி) மாஸ ஶுக்ல பக்ஷ ஸப்தமி திதிக்கு அமுக்தாபரண ஸப்தமி எனப்பெயர்,

இன்று திருமணமான ஸுமங்கலிப்பெண் காலை ஸுமார் 10 மணிக்கு மேல் மத்யாஹ்ண வேளையில் நதி, குளம் கிணற்றில் ஸ்நானம் செய்து ஒரு மண்டலம் அமைத்து அதில் பார்வதியுடன் சேர்ந்த பரமேஸ்வரனை, வரைந்து அதில் ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்ய வேண்டும், பூஜை முடிவில் ஏழு முடிச்சுகள் போடப்பட்ட பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட ரக்ஷை, கயிற்றை பெண் கீழ்கண்ட மந்திரம் சொல்லி தனது வலது கையில் கணவர் மூலம் கட்டிக் கொள்ள வேண்டும்.

सप्त सामोपगीतं त्वां सप्त लोक महेश्वरम्।
सूत्र ग्रन्थि स्थितं नित्यं धारयिष्यामि स्थिरो भव।।

ஸப்த ஸாமோபகீதம் த்வாம் ஸப்த லோக மஹேஶ்வரம்।
ஸூத்ரக்ரந்தி ஸ்திதம் நித்யம் தாரயிஷ்யாமி ஸ்திரோ பவ ॥

இதனால் பல காலமாக ஸந்ததி இல்லாமல் இருக்கும் பெண்கள் பார்வதிபரமேஶ்வரரின் அருளால் ஸந்ததி பாக்யம் குழந்தைச் செல்வம் ஏற்பட்டு, மேலும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாங்கல்யம் , தோடு வளையல் மெட்டி ஒட்டியானம் மூக்குத்தி போன்ற மங்களமான ஆபரணங்களை விட்டு என்றும் பிரிய நேராது. ஸுமங்கலியாகவே வாழும் பாக்யம் கிட்டும்.

ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716.

ஸ்காந்த மஹா புராணம்