"காமாக்ஷி" - பொருள் விளக்கம் - Courtesy SRS Mani

"காமாக்ஷி". -பொருள்  விளக்கம் .

1) காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால் இவள் "காமாக்ஷி".

2) நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் இவள் "காமாக்ஷி"

3)கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச்(அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள்.

4) கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் நேத்ரங்களாய் உடையதால் இவள் "காமாக்ஷி"

5) காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் இவள் "காமாக்ஷி"

6)காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு அக்ஷரங்களையும் கண்களாக கொண்டதால் இவள் "காமாக்ஷி"

7)கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, பார்வதியாக விளங்குவதால் இவள் "காமாக்ஷீ"

8) கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ மஹாமந்த்ரத்தை தனது கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி"

9) கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான லலிதாம்பாளே
தனது பஞ்ச ரூபங்களான "த்ரிபுரா", "ராஜராஜேச்வரீ", மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால் இவள் "காமாக்ஷி".

10)தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ".

11) தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

12) தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ"

13)தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

14) தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி".

15) தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி".

16)தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி".

"காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றனது

Courtesy SRS Mani