ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி - Sri Sivaganesan, Kadanthethi
ஸ்ரீ லலிதா அன்னையின் கருணையின் வடிவமே ஸ்ரீபாலாதேவி.
ஒன்பது வயது குமாரி வடிவம் என்றும் ஸர்வ வித்தைகளுக்கும் நித்யமானவள்.சிவந்த நிறமுடையவள், ஸ்ரீமஹாராக்ஞி அன்னையின் பாதகமலங்களில் ஸதா வசிப்பவள் , ஸ்ரீலலிதாஅன்னையின் நான்காவது நேத்ரம்,வெளியில் சஞ்ஞரிக்கும் ஸ்ரீஅன்னையின் ப்ராணனும் இந்த ஸ்ரீ பாலா தேவி என ஸ்ரீலலிதோபாக்யானம் கூறுகின்றது
ஸ்ரீஅன்னையின் தேஹத்திலிருந்து தோன்றியவள்.
"பண்டபுத்ர வதோக்யுக்த பாலா விக்ரம நந்திதா"ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்
ஸ்ரீ பண்டாசுர வதத்தின் போது பண்டனின் முப்பது புத்ரர்களையும் பாலாதேவி அழித்த வீரத்தைக்கண்டு மகிழ்ந்தவள் ஸ்ரீஅன்னை
"ஸ்ரீ பாலாயை நம: ஸ்ரீலலிதாம்பிகை பாலாம்பிகை வடிவினள்
இதற்கு அடுத்த நாமம் "லீலா வினோதினி" இந்த ப்ரபஞ்சவிளையாட்டில் அதாவது உலகனைத்தையும் படைத்தல்,காத்தல், அழித்தல் ஸ்ரீலலிதா தேவியின் விளையாட்டு ஆகும்.
இந்த ஸ்ரீபாலாம்பிகா (தீக்ஷை பெற்று) உபாஸிக்கும் பக்தர்களிடம் பல லீலா வினோதங்களை புரிந்து காப்பவள்.
( பாலா -பால லீலா வினோதினி).
ஒரு உதாரணம் காஞ்சியில் மஹாகவி காளிதாசரின் மறுபிறவியாக கூறப்படும் ஊமையான ஸ்ரீ மூகரை மஹாகவியாக்கி "மூக பஞ்சசதி" என்ற அன்னையைப்பற்றி 500 ஸ்லோகங்கள் கூற வைத்தவள் ஸ்ரீஅன்னையின் பாலாஸுரூபம்
(ஸ்ரீ மூகரைப்பற்றி ஸ்ரீகாமாக்ஷி கருணையில் விரிவாக காண்போம்)
தமிழில் இந்த அன்னையை ஸ்ரீ வாலை என்பர்
திருமூலர் திருமந்தரத்தில்
"சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்" என்றும்
"ஓங்காரி என்பாள் ஒரு பெண் பிள்ளை என்று புகழந்துள்ளார்.
கருவூரார் தனது பாடலில்
"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு" என பாடியுள்ளார்.
சித்தர்கள் வணங்கும் இந்த அன்னையை கொங்கணச்சித்தர்
வாலைக்கும்மி என்ற பாடல்களை பாடியுள்ளார்.
இந்த அன்னையின் உபதேச மந்திரத்தை ஸ்ரீலகு வித்யா,, என்பர்.
ஸ்ரீவித்யா உபாஸனையில் ஸ்ரீகணபதி மந்திரத்திற்கு அடுத்து முதல் மந்த்ரம் ஸ்ரீபாலா மந்த்ரம்..விருக்ஷத்தின விதை போன்றது. .இதனுடைய விரிவாக்கம் அடுத்த மந்திரம் என்பர் ஸ்ரீபாலா அன்னையின் உபாஸனை செய்து அருள்பெற்று எல்லா நலமுடன் வாழ்வோர்.கோடானு கோடி பக்தர்கள்.மற்றவை குருவின் மூலமாக அறியவேண்டியவை
இந்த அன்னை உபாஸனையால் மட்டும் அடைய தகுந்தவள் என்பதால் மந்திரோபதேச பெறாதவர்கள் ஆலயங்களிலோ அல்லது அனைத்தும் சக்திகளின் மூலமான ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை வணங்கி நலமுடன் வாழ்வோம்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஸுரூபம் ஸ்ரீபுவனேஸ்வரி.எல்லா புவனங்களுக்கும் ஈஸ்வரி ஸ்ரீபுவனேஸ்வரி ஆகும்.ஈரேழு பதிநான்கு லோகத்திற்கும் ஈஸ்வரி.இந்த புவனம் ஒரு அண்டம். ஸ்ரீலலிதா த்ரிசதியில் "லக்ஷகோட்யண்ட நாயிகா " என்ற நாமம் ஒரு லக்ஷம் கோடி அண்டங்களுக்கு ஈஸ்வரி ஸ்ரீலலிதா பரமேஸ்வரி.
தேவி பாகவதம் ஸ்ரீபராசக்தி அன்னையின் பரத்துவ ப்ரவாவக மஹிமையை கூறுவது அனைவரும் அறிந்ததே.
அதில் ஜனமே ஜயன் வியாசரைப் பார்த்து இந்த தேவி யார்?மும்மூர்த்திகள் யார்? அவர்களை இயக்குவது யார்? எனக்கேட்டதற்கு ஸ்ரீவியாஸ பகவான் கூறியத் சில வற்றைக்காண்போம்.
தேவி தன்னை தந்தை ஹிமவானிடம் கூறியதை கூறுகிறேன் என்று
தேவி உலகம் உண்டாவதற்கு முன்பு இருந்தேன்.அவ்வப்போது வேற ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய பரப்ரம்ம ப்ரவாகத்தை கூறி தன் விஸ்வரூபத்தைக்காட்டி ப்ரபஞ்சமான எல்லா லோகத்தை தன் தேகமாக காட்டியருளியதைக்கூறி இந்த தேவி பராசக்தி புவனேஸ்வரி என்றார்.
மும்மூர்த்திகளும் உருவாதல், அன்னையை வழிபடுதல்,அவர்களுக்கு மூன்று சக்தியை அளித்தல் பற்றி கூறும்போது.. ஸ்ரீப்ரம்மா ஆதிசக்தியை நோக்கி தாயே உன்னை ஸ்ரீசிவனின் அருள் ரூபமென்றும், வேத சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தால் மாயா ஸுருபினியான நீயும் மாயையைக்கடந்த பரமசிவத்தை தவிர்த்து வேறு பொருளில்லை அதனால் நீங்கள் சிவனா? ஆணா பெண்ணா வேறு ஏதாவதா எனக்கு கூறியருங்கள் என வேண்டினார்.
அதற்கு அன்னை நானும் சிவனும் ஒன்றே நானே அவர்.அவரே நான் உலகை படைக்கும் இரண்டாக பிரிந்தோம்.அந்த இரண்டும் ஒரு கண்ணாடியின் முன் ஒரு தீபத்தை வைத்தால் இரண்டாக தோன்றும் ஆனால் ஒன்றே அது போன்று நாங்கள் இதுவே த்ருஸ்யம்,அத்ருச்யம் எனப்படும் எனக்கூறியருளினாள்
தசமஹாவித்யாவில் புவனேஸ்வரி வித்யா ஒன்று.இந்த அன்னையின் மந்திரம் ஏகாக்ஷரி.மிகவும் சிறந்ததது. அன்னையின் பீஜமந்திரத்திலிருந்து தான் அனைத்து புவனங்களும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவித்யையின் ரத்னம்என்று அம்மந்திரம் புகழப்படுகிறது.
.
உபாஸனை மார்க்கமாகவும், உபாஸனை இல்லாதவர்களானாலும் இந்த அனனை வணங்குபவர்கள் கேட்டதை உடனே காரணம் பாராமல் அருளும் அவ்யாஜ கருணை வடிவம்.
நமக்கு நன்கு தெரிந்த அன்னையின் ஸ்லோகம், பாடல்,நாமங்களால் அன்னையை வணங்கி ஆத்மஞானம் மற்றும் எல்லாவித சுகம் பெற்று நலமுடன் வாழ்வோம்.
ஸ்ரீ லலிதா அன்னையின் கருணையின் வடிவமே ஸ்ரீபாலாதேவி.
ஒன்பது வயது குமாரி வடிவம் என்றும் ஸர்வ வித்தைகளுக்கும் நித்யமானவள்.சிவந்த நிறமுடையவள், ஸ்ரீமஹாராக்ஞி அன்னையின் பாதகமலங்களில் ஸதா வசிப்பவள் , ஸ்ரீலலிதாஅன்னையின் நான்காவது நேத்ரம்,வெளியில் சஞ்ஞரிக்கும் ஸ்ரீஅன்னையின் ப்ராணனும் இந்த ஸ்ரீ பாலா தேவி என ஸ்ரீலலிதோபாக்யானம் கூறுகின்றது
ஸ்ரீஅன்னையின் தேஹத்திலிருந்து தோன்றியவள்.
"பண்டபுத்ர வதோக்யுக்த பாலா விக்ரம நந்திதா"ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்
ஸ்ரீ பண்டாசுர வதத்தின் போது பண்டனின் முப்பது புத்ரர்களையும் பாலாதேவி அழித்த வீரத்தைக்கண்டு மகிழ்ந்தவள் ஸ்ரீஅன்னை
"ஸ்ரீ பாலாயை நம: ஸ்ரீலலிதாம்பிகை பாலாம்பிகை வடிவினள்
இதற்கு அடுத்த நாமம் "லீலா வினோதினி" இந்த ப்ரபஞ்சவிளையாட்டில் அதாவது உலகனைத்தையும் படைத்தல்,காத்தல், அழித்தல் ஸ்ரீலலிதா தேவியின் விளையாட்டு ஆகும்.
இந்த ஸ்ரீபாலாம்பிகா (தீக்ஷை பெற்று) உபாஸிக்கும் பக்தர்களிடம் பல லீலா வினோதங்களை புரிந்து காப்பவள்.
( பாலா -பால லீலா வினோதினி).
ஒரு உதாரணம் காஞ்சியில் மஹாகவி காளிதாசரின் மறுபிறவியாக கூறப்படும் ஊமையான ஸ்ரீ மூகரை மஹாகவியாக்கி "மூக பஞ்சசதி" என்ற அன்னையைப்பற்றி 500 ஸ்லோகங்கள் கூற வைத்தவள் ஸ்ரீஅன்னையின் பாலாஸுரூபம்
(ஸ்ரீ மூகரைப்பற்றி ஸ்ரீகாமாக்ஷி கருணையில் விரிவாக காண்போம்)
தமிழில் இந்த அன்னையை ஸ்ரீ வாலை என்பர்
திருமூலர் திருமந்தரத்தில்
"சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்" என்றும்
"ஓங்காரி என்பாள் ஒரு பெண் பிள்ளை என்று புகழந்துள்ளார்.
கருவூரார் தனது பாடலில்
"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு" என பாடியுள்ளார்.
சித்தர்கள் வணங்கும் இந்த அன்னையை கொங்கணச்சித்தர்
வாலைக்கும்மி என்ற பாடல்களை பாடியுள்ளார்.
இந்த அன்னையின் உபதேச மந்திரத்தை ஸ்ரீலகு வித்யா,, என்பர்.
ஸ்ரீவித்யா உபாஸனையில் ஸ்ரீகணபதி மந்திரத்திற்கு அடுத்து முதல் மந்த்ரம் ஸ்ரீபாலா மந்த்ரம்..விருக்ஷத்தின விதை போன்றது. .இதனுடைய விரிவாக்கம் அடுத்த மந்திரம் என்பர் ஸ்ரீபாலா அன்னையின் உபாஸனை செய்து அருள்பெற்று எல்லா நலமுடன் வாழ்வோர்.கோடானு கோடி பக்தர்கள்.மற்றவை குருவின் மூலமாக அறியவேண்டியவை
இந்த அன்னை உபாஸனையால் மட்டும் அடைய தகுந்தவள் என்பதால் மந்திரோபதேச பெறாதவர்கள் ஆலயங்களிலோ அல்லது அனைத்தும் சக்திகளின் மூலமான ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை வணங்கி நலமுடன் வாழ்வோம்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஸுரூபம் ஸ்ரீபுவனேஸ்வரி.எல்லா புவனங்களுக்கும் ஈஸ்வரி ஸ்ரீபுவனேஸ்வரி ஆகும்.ஈரேழு பதிநான்கு லோகத்திற்கும் ஈஸ்வரி.இந்த புவனம் ஒரு அண்டம். ஸ்ரீலலிதா த்ரிசதியில் "லக்ஷகோட்யண்ட நாயிகா " என்ற நாமம் ஒரு லக்ஷம் கோடி அண்டங்களுக்கு ஈஸ்வரி ஸ்ரீலலிதா பரமேஸ்வரி.
தேவி பாகவதம் ஸ்ரீபராசக்தி அன்னையின் பரத்துவ ப்ரவாவக மஹிமையை கூறுவது அனைவரும் அறிந்ததே.
அதில் ஜனமே ஜயன் வியாசரைப் பார்த்து இந்த தேவி யார்?மும்மூர்த்திகள் யார்? அவர்களை இயக்குவது யார்? எனக்கேட்டதற்கு ஸ்ரீவியாஸ பகவான் கூறியத் சில வற்றைக்காண்போம்.
தேவி தன்னை தந்தை ஹிமவானிடம் கூறியதை கூறுகிறேன் என்று
தேவி உலகம் உண்டாவதற்கு முன்பு இருந்தேன்.அவ்வப்போது வேற ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய பரப்ரம்ம ப்ரவாகத்தை கூறி தன் விஸ்வரூபத்தைக்காட்டி ப்ரபஞ்சமான எல்லா லோகத்தை தன் தேகமாக காட்டியருளியதைக்கூறி இந்த தேவி பராசக்தி புவனேஸ்வரி என்றார்.
மும்மூர்த்திகளும் உருவாதல், அன்னையை வழிபடுதல்,அவர்களுக்கு மூன்று சக்தியை அளித்தல் பற்றி கூறும்போது.. ஸ்ரீப்ரம்மா ஆதிசக்தியை நோக்கி தாயே உன்னை ஸ்ரீசிவனின் அருள் ரூபமென்றும், வேத சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தால் மாயா ஸுருபினியான நீயும் மாயையைக்கடந்த பரமசிவத்தை தவிர்த்து வேறு பொருளில்லை அதனால் நீங்கள் சிவனா? ஆணா பெண்ணா வேறு ஏதாவதா எனக்கு கூறியருங்கள் என வேண்டினார்.
அதற்கு அன்னை நானும் சிவனும் ஒன்றே நானே அவர்.அவரே நான் உலகை படைக்கும் இரண்டாக பிரிந்தோம்.அந்த இரண்டும் ஒரு கண்ணாடியின் முன் ஒரு தீபத்தை வைத்தால் இரண்டாக தோன்றும் ஆனால் ஒன்றே அது போன்று நாங்கள் இதுவே த்ருஸ்யம்,அத்ருச்யம் எனப்படும் எனக்கூறியருளினாள்
தசமஹாவித்யாவில் புவனேஸ்வரி வித்யா ஒன்று.இந்த அன்னையின் மந்திரம் ஏகாக்ஷரி.மிகவும் சிறந்ததது. அன்னையின் பீஜமந்திரத்திலிருந்து தான் அனைத்து புவனங்களும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவித்யையின் ரத்னம்என்று அம்மந்திரம் புகழப்படுகிறது.
.
உபாஸனை மார்க்கமாகவும், உபாஸனை இல்லாதவர்களானாலும் இந்த அனனை வணங்குபவர்கள் கேட்டதை உடனே காரணம் பாராமல் அருளும் அவ்யாஜ கருணை வடிவம்.
நமக்கு நன்கு தெரிந்த அன்னையின் ஸ்லோகம், பாடல்,நாமங்களால் அன்னையை வணங்கி ஆத்மஞானம் மற்றும் எல்லாவித சுகம் பெற்று நலமுடன் வாழ்வோம்.