ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதங்கள் By Kadanthethi B Sivaganesan
=================================
1.பாசம்
=======
ஆசையின் வடிவம் பாசம். "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பர்.அம்பிகையிடம் பற்றாகிய பக்தியையும் அவள்காலடியில் ஆசைவைத்தால் மற்ற பற்றுகளும் ஆசையும் அறுபடும்.
அம்பிகையிடம் உண்மையான பக்தி செலுத்துவோர்க்கு நற்கதிஅடைய வழி வகுக்கும் ஆயுதம்.
ராகஸ்வரூப பாசாட்யை நம ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம நாமம்
ஆசையின் வடிவமான பாசத்தை இடது கையில் தாங்கி நிற்பவள்
"இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞானரூபிணம்
கிரியாசக்திமயே பாணதனுஷீ ததஜ்வலம்"
என்ற ஸ்லோகத்தின் படி பாசம்=இச்சாசக்தி ஆகும்.
இந்த இச்சாசக்தி,ஞானசக்தி,கிரியாசக்தியாக மூன்று சக்திகளும் எல்லா தெய்வங்களும் இயங்க காரண சக்திகள்.சில புருஷ தெய்வங்களுக்கு மூன்று சக்தியின் ஒன்றே.
சில புருஷ தெய்வங்களுக்கு இரண்டு அம்பிகை இம்மூன்று சக்தியாக விளங்குவர்.
(அம்பிகைஎன்பது அந்தந்த தெய்வங்களின் பத்னிகள்)
ஸ்ரீசாஸ்தாவிற்கு தனி விசேஷம்
----------------------------------------------------------
"இச்சாசக்திமயீம் பூர்ணாம் கிரியாசக்தீச புஷ்களாம் த்வயம்ச பார்ச்வயோர் தேவ்யௌ ஞான சக்தி சக்தி மயம் ப்ரபும்"
இச்சாசக்தி ஸ்ரீபூர்ணாதேவி,கிரியாசக்தி ஸ்ரீபுஷ்களாதேவி
ஸ்ரீசாஸ்தாவே ஞானசக்தி ரூபமாகவும் விளங்குகிறார் என இந்த ஸ்லோகம் சொல்கிறது
இதே கருத்தை ஸ்ரீசுப்ரமணியருக்கு ஞானசக்தியையே தேஹமாக கொண்டவர் என ஸ்ரீதத்வ நிதி கூறுகிறது
பாசத்தின் அதிஷ்டானதேவதை.ஸ்ரீஅன்னையின் பாசத்திலிருந்து தோன்றிய ஸ்ரீஅஸ்வாரூடாதேவி
ஸ்ரீஅம்பிகையோட குதிரைப்படதலைவி, குதிரையின் பெயர் அபராஜிதம்.அபராஜிதம் என்றால் வெல்ல முடியாதது
"அஸ்வாரூடா அதிஷ்டத அஸ்வ கோடி கோடி பிராவ்ருதா"
ஸ்ரீஅஸ்வாரூடாவின் தலைமையில் இயங்கும் கோடிக்கான குதிரைப் படைகளால் சூழப்பட்டவள் அன்னை
ஸ்ரீஅன்னையின் பாசாயுதத்தை தியானித்தால் மனக்குதிரை என்று கூறப்படும் மனத்தில் தோன்றும் தீய எண்ணங்கள், விபரீத கற்பனைகள் நீங்கி எண்ணங்களை நெறிப்படுத்தி நற்கதி தரும் பாதையில் செல்லலாம்.
2.அங்குசம்
==========
க்ரோதாகாராங்கு ஶோஜ்வலா=குரோதத்தின் வடிவமான அங்குசத்தை தாங்கி ப்ரகாசிப்பவள்=ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்
அங்குசம் என்பது யானையை அடக்கும் கருவி.மதங்கொண்ட யானையை அங்குசம் அடக்குவது போல் நமது அடங்காத ஆணவத்தை ஸ்ரீஅம்பிகை அடக்கி அருள்புரிவார்.
நாம் பாவங்களை செய்ய காரணமாக இருப்பது
" காமம்,குரோதம்,லோபம்,மதம், ஆச்சர்யம்" இவைகளின் மிகுதியால் பாவங்களை செய்து
அதனால் வரும் கர்மவினையால்துன்பப்படுகிறோம்.
காமம் என்றால் ஆசை அதனால் பாவங்களையும்,துர்மோக ஆசையையும் பாசத்தினால் ஸ்ரீஅம்பிகை நீக்குகிறாள்.
குரோதத்தை போக்கி அதனால் வரும் பாவ கர்மவினையை ஸ்ரீஅம்பிகை அங்குசத்தால் நீக்கி நம்மை ஆட்கொள்கிறாள்
மூன்று சக்திகளில் அங்குசம் ஞானசக்தி ஆகும்
அங்குசத்தின் அதிஷ்டான தேவதை= ஸ்ரீ சம்பத்கரி.
ஸ்ரீஅம்பிகையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி ஸ்ரீசம்பத்கரி ஸ்ரீஅம்பிகையின் யானைப்பட தலைவி.வாஹனம் யானையின் பெயர் "ரணகோலாகலம்" யானைப்படையை வழிநடத்துபவள்.
"ஸம்பத்கரி ஸமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா"ஸ்ரீலலதா ஸஹஸ்ரநாமம்.
ஸ்ரீசம்பத்கரியின் யானைப்படைகளால் சூழப்பட்டவள்
ஸ்ரீசம்பத்கரி பெயர் விளக்கம்
----------------------------
சகல சம்பத்து மயமான விருத்திக்கு சம்பத்கரி என்று பெயர்.
ஞானம்,ஞாத்ரு,ஞேயம் முறையே அறிவு,அறிகிறவன், அறிவிக்கப்படும் பொருள் இம்மூன்றுக்கும் திரிபுடி என்று பொருள்.
இம்மூன்றினுடைய வித்யாசங்களை தெரிந்து கொண்டு அவைகளை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்த விருத்திக்கு ஸுக சம்பத்கரி என்று பெயர்.
ஸ்ரீசம்பத்கரி தேவியை வணங்கி குரோதங்களை விட்டு ஞானம் பெற்று சகலவித சம்பத்துடன் ஐயமின்றி வாழ்வோம்.
3 .புஷ்பபானம்
==============
சப்தம்,ஸ்பரிசம்,ரஸம்,ரூபம்,கந்தம் என்ற பஞ்சதன்மாத்திரைகளே ஸ்ரீஅன்னையின் புஷ்ப பானம்
புஷ்பபானத்தின் அதிஷ்டான தேவதை ஸ்ரீ வாராஹி.
அம்பிகையின் புஷ்ப பானத்திலிருந்து தோன்றிய அன்னை ஸ்ரீவாராஹி. அன்னையின் சதுரங்க படையின் தலைவி.. க்ரியா சக்தியின் வடிவம்
ஸ்ரீலலிதா அன்னை தன் புருவ நெறிப்பிலிருந்து ஒரு தண்டத்தை உருவாக்கி ஸ்ரீவாராஹி தேவிக்கு கொடுத்தாள்.அதனால் தண்டநாதா என்ற பட்டம் ஸ்ரீவாராஹி தேவிக்கு வந்தது.
கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் நமக்கு தெரியாது. மஹாபாவங்களை செய்ய தூண்டுவது கோபம்
"க்ருத்தோ ஹன்யாத் குரூன்னபி" இந்த வாக்யத்திற்கு அர்த்தம் சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் கோபத்தினால் செய்யபடும் இப்பாவத்திற்கு உலகம் அழியும் வரை நரக வாசத்தை தருவது. மனதால் கூட நினைக்க கூடாத பாவம்.
எல்லா பிராணிகளை விட வராகத்திற்கு பலம் ஜாஸ்தி.அதனால் இந்த ரூபம் அன்னைக்கு.
கோபத்தை அடக்குவதற்கும் சத்ரு ஜெயம் ஏற்பட ஸ்ரீவாராஹி அன்னையை வணங்குதல் வேண்டும்.
சத்ரு என்பது மனித எதிரிகள் மட்டும் அல்ல நாம் செய்த பாவகர்மவினையே நமக்கு உண்மையான சத்ரு.அதனால் எதிரிகள் உருவாகின்றனர்.
" பூர்வ ஜன்ப க்ருதம் பாபம் சத்ரு ரூபேன பாததே" என்கிறது சாஸ்திரம்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில்
"கிரி சக்ர ரதாரூட தண்ட நாதா புரஸ்கிருதா"
கிரி என்றால் காட்டுப்பன்றி.காட்டு பன்றிகள் பூட்டிய ரதத்தில் வரும் தண்ட நாதாவால் வழிகாட்டவள் .அதாவது பண்டாஸுர யுத்தத்தில் சதுரங்க படையுடன் ஸ்ரீஅன்னைக்கு முன் சென்றவள்.
"விசுக்ரப்ராண ஹரண வாராஹி வீர்ய நந்திதா"
விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள் அன்னை ஸ்ரீலலிதா தேவி என்கிறது.
விசுக்ரன் என்ற பண்டாசுரனின் தம்பிகளில் ஒருவன் .பண்டாசுர படைத்தலைவனை அழித்தவள்
(பண்டாசுரனின் அமைச்சர்களான ஏழு பிலாஸ்கரர் கண்களை குருடாக்கி அழித்தவள் .ஒன்றைப்பங்கு அக்ஷௌகினி சேனையையும் அழித்தவள் ஸ்ரீ வாராஹி)
தமோ குணத்தையும்,தீய சக்திகளையும் அழிப்பவள் ஸ்ரீவாராஹி
திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில் சக்தி பீடங்களில் ஸ்ரீவாராஹி பீடமாக போற்றப்படுகிறது.
ஸ்ரீ வாராஹி அன்னையை உபாசனை இல்லாதவர்கள் ஆலயம் சென்று வழிபடலாம் ஏனென்றால் வீட்டில் வழிபட ஆசார அனுஷ்டாங்கள் தேவை என்பது பெரியோர்கள் வாக்கு
சப்த மாதாக்களில் ஒரு மாதா அதனால் சப்த மாதா ஆலயத்திலும் வழிபடலாம் (சப்த கன்னியர்கள் வேறு)
இந்த அன்னையைப் பற்றி பிறகு விரிவாக காண்போம்
ஸ்ரீஅன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.
4.கரும்பு வில்
--------------------------
ஞானிகள் தொழில்படுவதற்காக புற உலகினரால் காணப்படும் மனமே ஸ்ரீஅன்னையின் கரும்புவில்
ஸ்ரீஸ்யாமளா என்றால் பச்சை நிறத்தில் ஜ்வலிப்பவள்
ஸ்ரீ ச்யாமளா தேவி அம்பிகையின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள்.
ஸ்ரீலலிதா அன்னைக்கு ப்ரியமான தேவி.அன்னையால் மந்திரிணியாக நியமிக்கப்பட்டவள் .ஸ்ரீலலிதா தேவி ஆக்ஞையின்படி எல்லா லோகங்களான ராஜ்யத்தை ஆள்பவள்
.ஸ்ரீஅன்னைக்கு அடுத்த நிலையில் உள்ள தேவி.
ஸ்ரீஸ்யாமளாவின் மூன்று உபாங்க தேவதைகள் லகு மாதங்கி, வாக்வாதினி, லகுலி என்பர்
ஸ்ரீவராஹி தேவிக்கு தண்டம் அளித்தது போல் ஸ்ரீஅன்னை ஸ்ரீ மந்திரிணி தேவிக்கு ஸர்வலோக அன்னையின் சாம்ராஜ்ய பரிபாலன த்திற்கு பிரதிநிதியாக நியமித்தின் அடையாளமாக "முத்ரை மோதிரத்தை அளித்தாள்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில்
"மந்திரிணீ ந்யஸ்த ராஜ்ய தூ:=ஸ்ரீமந்திரிணீ தேவியிடம் அரசாட்சி பொறுப்பை ஒப்படைத்தவள் ஸ்ரீ அன்னை
"கேய சக்ர ரதா ரூட மந்திரிணி பரிஸேவிதா"
கேயம் என்றால் இசை .ஏழு ஸ்வரங்களையும் ஏழு தட்டுகளுடைய கேய சக்ரம் என்ற மந்திரிணியின் ரதம்
மந்திரிணி தேவியின் கேய சக்ர ரதத்திற்கு நான்கு வேதங்களும் சக்கரங்களாக உள்ளது.சதுர்வித புருஷார்த்தங்களும் குதிரைகளாக
உள்ளது.அந்த கேயசக்ர ரதத்தில் ஏறிய மந்திரிணியால் ஸவிக்கப்படுபவள் ஸ்ரீலலிதா தேவி
.
"மந்திரிணி அம்பா விரசித விஷங்கவத தோஷிதா"
மந்திரிணி தேவி விஷங்கனை அழித்ததை கண்டு மகிழ்ந்தவள் அன்னை
பண்டாஸுர யுத்தத்தில் பண்டாஸுரன் ருத்ரனின் அருளால் இடது தோளிலிருந்து விஷங்கனையும் வலது தோளிலிருந்து விசுக்ரனையும் படைத்து தனது சகோதரனாக போற்றினான்.
கன்ம மலத்தின் பிரதிநிதி யான தீய செயல்கள் புரியும் விஷங்கனை அமைச்சராக்கினனான்.கன்ம மலரூப விஷங்கனை மந்திர சக்தியான ஸ்ரீச்யாமளா என்கிற மந்திரிணி அழித்தாள்
ஸ்ரீ கதம்ப வன வாஸினி மதுரை மீனாக்ஷி அன்னை ஸ்ரீஸ்யாமளா தேவியே.
(அதைப்பற்றி ஸ்ரீமீனாக்ஷி தேவியைப்பற்றி கூறும் போது விரிவாக காண்போம்)
ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர் (மதங்கம் என்றால் யானை).
பிரம்மதேவரின் உத்தரவை ஏற்று மதங்க முனிவர், திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யம் என்ற வனத்தில் ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றியபோது இறைவனின் காட்சி கிடைத்தது. என்ன வரம் வேண்டும்? என இறைவன் கேட்டபோது, ஆதிபராசக்தியே தன் மகளாகப் பிறந்திட வேண்டும் என்று வேண்டினார் மதங்கர். இறைவனும் அப்படியே வரம் தந்தார். பின்னர், சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய பஞ்சதக்ஷாரி மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பராசக்தி. என் மனதின் வாக்கின் படி மந்திரிணியே உமக்கு மகளாய் பிறப்பாள் என்று வரமருளினாள். மதங்க முனிவரின் மகளாக தோன்றியதால் ஸ்ரீமாதங்கி என்று அழைக்கப்பட்டாள்
ஸ்ரீராஜமாதங்கி என போற்றப்படும் அன்னையை பூலோகம் மட்டுமில்லாமல் தேவலோக, மங்கைகள்,யக்ஷ, கந்தர்வ,கின்னர மங்கைகள் சித்தலோகவாசிகள் தினமும் பூஜிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சங்கீதம்,கல்வி,ஞானம்,விஞ்ஞானம்,மேதாவிலாசம் .ஞாபக சக்தி தைர்யம் ஆளுமை திறன் போன்ற எல்லாவித நன்மையை தரும் ஸ்ரீ ச்யாமளா அன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.
(ஸ்ரீவாராஹி,ஸ்ரீச்யாமளா தேவிகளின் பெருமைகளை சதுர்வித நவராத்திரி, ஸ்ரீ பஞ்சகம், ஸ்ரீபுரத்தை பற்றி கூறும் விரிவாக காண்போம்)