ஆத்ம ஞானம்

வேதங்களைப் *படித்தால்* *மட்டும்*
ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதில் சொல்லியுள்ள கர்மாக்களை ச்ரத்தையுடன் செய்து வந்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அதன் மூலம் பல விஷயங்கள் ஸ்புரிக்கத்துவங்கும். அதன் மூலம் ஆத்மவிசாரம் செய்ய ஆரம்பித்தால் இறுதியில் ஞானம் கிடைக்கும் என்பதாக பெரியோர்கள் சொல்கிறார்கள். இது ஓரிரு நாளிலோ, வருஷத்திலோ, ஏன் ஒரே பிறவியிலோ வருவதல்ல. பல ஜென்மாக்கள் தொடர்ந்து ப்ரயாசைப்பட்டால் மட்டுமே கிடைக்கக்கூடியது.